June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

1 min read

In 13 months in Tamil Nadu, 12 raiders shot dead in an encounter

24.9.2024
தமிழகம் முழுவதும் கடந்த 13 மாதங்களில் என்கவுண்ட்டர்கள் மூலம் 12 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாம்பரம் அருகே சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய 2 ரவுடிகளும், அக்டோபர் மாதம் சோழவரம் அருகே முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 ரவுடிகளும்,
நவம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி குள்ள விஸ்வாவும், அதே மாதம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொம்பன் ஜெகன், டிசம்பர் மாதம் காஞ்சீபுரம் அருகே ரகுவரன், கருப்பு பாட்ஷா ஆகிய 2 ரவுடிகளும் என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே துரை என்ற ரவுடியும், மாதவரம் அருகே ரவுடி திருவேங்கடமும், கடந்த 18-ந்தேதி அன்று வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே தாதா காக்கா தோப்பு பாலாஜியும், தற்போது ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்றபின்னர் 3 என்கவுண்ட்டர்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.