சிவகிரி அருகே மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது
1 min read
2 persons arrested for accepting bribe of Rs.5 thousand for electricity connection near Sivagiri
2/10/2024
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே விவசாய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் போர்மேன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சிவகிரி அருகே உள்ள தெற்குசத்திரம் மங்கம்மா சாலையை சேர்ந்த சிவன் என்பவரது மகன் மாரிமுத்து
(வயது 64) விவசாயியான இவர் தனது மகன் பேச்சியப்பனுக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்குழாய் அமைத்துள்ளார். இதற்கு மின் மோட்டார் பொருத்துவதற்கு விவசாய மின் இணைப்பு கோரி சிவகிரி மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது சிவகிரி உதவி செயற்பொறியாரை சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளனர் .
அதனைத் தொடர்ந்து மாரிமுத்து உதவி செயற்பொறியாளர் கடையநல்லூர் முத்துகிருஷ் ணாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 42) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப் பிக்குமாறும் அதன் பின்னர் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், போர்மேன் சிவகிரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி இருவரும் குறிப்பிட்ட
நிலத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.
பின்னர் மின் இணைப்பிற்கு கட்ட ணம் ரூ.16,499 செலுத்த வேண்டும் எனவும் மின் இணைப்பு கொடுப்பதற்கு ரூ.35 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி செயற் பொறியாளர் முத்துக்குமார் போர்மேன் மருதுபாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்காக முதல் கட்டமாக ரூ5 ஆயிரம் கொடுக்கவேண்டும் எனவும் அலுவலகத்திற்கு பணத்துடன் வருமாறும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாரிமுத்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலிசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து மாரிமுத்து ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்துடன் நேற்று சிவகிரி மின்வாரிய அலுவலக
உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரிடம் ரூ.5. ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர், இன்ஸ்பெக்டர் ஜெய்ஸ்ரீ, சப்இன்ஸ்பெக்டர் ரவி சிறப்பு சப் இன்ஸ்பெக் டர் தெய்வக்கன் ராஜா, ஏட்டுக்கள் வேணு கோபால், பிரபு, கோவிந்தராஜன், கணேசன் பிரவீணா ஆகியோர் அடங்கிய போலீசார் லஞ்சம் பெற்ற உதவி செயற்பொறியாளர் முத்துக் குமார் அவருடன் இருந்த போர்மேன் மருதுபாண்டிஆகிய இருவரையும் கையும், களவுமாககைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.