June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் அருகே தண்டவாளத் தில் பாறாங்கல்லை வைத்த 2 பேர் கைது

1 min read

2 people arrested for placing boulders in Thandavalad near Kadayanallur

3/10/2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு கடந்த 25ம் தேதி மாலை 6.25 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திற்கும், சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள கடையநல்லூரை அடுத்த சங்கனாப்பேரி பகுதியில் ரயில் 6.50 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக ரயில் இன்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.
இதனால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. பின்னர் டிரைவர், தண்டவாளத் தில் இருந்து கல்லை அகற்றினார். இதன் காரணமாக சுமார் 20 நிமிடம் தாமத மாக இரவு 7.10 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.

இது குறித்து ரயில் இன்ஜின் டிரைவர் பாலசங்கரன், ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் தலைமையில் நெல்லை ரயில்வே டிஎஸ்பி இளங் கோவன் மேற்பார்வையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்து வந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு தனித்தனியே சங்கனாப்பேரி சுற்றுவட்டா ரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அருகிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் அடிக்கடி தண்ட வாளத் தில் நடந்து சென்று செல் போனில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டது தெரிய வந்தது. உடனே தனிப்படையினர் கல்குவாரியில் வேலை செய்து வரும் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதில் சத்தீஸ்கர் மாநிலம் ஜகல்பூர் பாஸ்கர் பனரா பகுதியைச் சார்ந்த புல்சிங் பாகல் ( வயது 21) ஈஸ்வர் மேடியா ( வயது 23) ஆகியோர் ரீல்ஸ் மோகத்தில் தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல்லை வைத்து ரீல்ஸ் எடுத்திருப்பதும் பின்னர் அந்த கல்லை எடுத்து போடாமல் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது செல்போன் என்னை ஆய்வு செய்த தனிப்படையினர்
அதனை உறுதி செய்தனர்.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.