தென்காசி மாவட்டத்தில் நேரக்கட்டுப்பாட்டை மீறும் கனரக வாகனங்கள்-ரவிஅருணன் கண்டனம்
1 min read
Ravi Arunan condemns heavy vehicles violating time limit in Tenkasi district
4.10.2024
இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரவி அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயங்க முடியும். – இது மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு
அதேபோல் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மாலை 4 முதல் திங்கள் காலை 6 மணி வரை தான் கனிமவள வாகனம் இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது .
ஆனால் சமீப காலமாக கீழ் மட்ட அதிகாரிகள் இந்த நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கும் கனரக வாகனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனுமதித்து வருகின்றனர்.
கனிம வள வாகனங்களால் ஏற்படும் வி(ஆ)பத்தை கருத்தில் கொண்டே மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
நேர கட்டுப்பாட்டை மீறி எந்த பகுதியில் கனிம வள வாகனம் இயங்குகிறதோ அந்தப் பகுதியில் உள்ளமோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மீது* மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
அந்தந்த பகுதியில் உள்ள வர்த்தக சங்கங்களும் பொதுமக்களும் சமூக நல அமைப்புகளும் நேர கட்டுப்பாட்டை கனிம வள வாகனங்கள் மீறினால் வண்டி எண்ணை குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி இயற்கை வள பாதுகாப்பு சங்க சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.