June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம் பகுதியில் வன உயிரின வார விழா

1 min read

Wildlife Week Festival in Old Courtalam area

6.10.2024
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் இந்திய வன உயிரின வார விழாவை முன்னிட்டு
நெடுங்குளம் குளத்துக்கரையில் 500 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே இந்திய வன உயிரின வார விழா தினத்தை முன்னிட்டு ஆயிரப்பேரி ஊராட்சிக்குட்பட்ட நெடுங்குளம் குளத்துக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்திய வன உயிரின வார விழா தினத்தை முன்னிட்டு பாட்டப்பத்து கயல் வாழ்வு‌ அறிவியல் மற்றும் அடவி வாசிப்பு இயக்கம் சார்பாக நெடுங்குளம் குளத்துக்கரையில் 500 பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கயல் வாழ்வு அறிவியல் மற்றும் அடவி வாசிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.சுரேஷ் தலைமை தாங்கினார் மா.இசக்கிராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார். பி.முருகேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார்.அதனை தொடர்ந்து சிறப்பு பங்கேற்பாளராக சுற்றுச்சூழலியல் புகைப்பட கலைஞர் கு.மனோஜ் பிரபாகரன் , அடவி வாசிப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜ் ஆகியோர் பனை விதைகள் நடும் பணியை‌ தொடங்கி வைத்தார்கள் .‌

இந்நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அடவி வாசிப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் இசக்கிமுத்து, கோபாலகிருஷ்ணன், புகழேந்தி, மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.‌
மேலும்‌ ஆட்டோ‌ ரமேஷ் கொடுத்த‌ மருதமரம், இலுப்பை, நாவல் போன்ற நாட்டு மரகன்றுகளும்‌ நடப்பட்டன முடிவில் தர்மராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.