இறந்த மகனின் விந்தணுவுக்கு உரிமை கோரிய பெற்றோர் – உயர்நீதிமன்றம் அதிரடி
1 min read
Parents who claim dead son’s sperm – High Court takes action
11.10.2024
இறந்த மகனின் விந்தணுவை சொத்தாகக் கருத முடியும் என்றும் அதை பெற்றோர் வைத்துக்கொள்ள உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ப்ரீத் இந்தர் சிங் [30 வயது] என்ற இளைஞருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கேன்சர் நோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் சேமித்துள்ளார் அவர். தற்போது சிகிச்சை பலனளிக்காமல் ப்ரீத் இந்தர் சிங் உயிரிழந்த நிலையில் அவரின் உறையவைக்கப்பட்ட விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரின் பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், நபரின் விந்தணுவை சொத்தாக பாவிக்க முடியும் என்பதாலும், இந்துமத சொத்துரிமை சட்டத்தின்படி பெற்றோருக்கு மகனின் சொத்தில் முதல் உரிமை உள்ளது என்பதாலும் இறந்த மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுவை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். மகனின் விந்தணுவை வைத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.