பத்திரிகை ஆசிரியர் இறப்புக்கு சென்று திரும்பிய உரிமையாளர் விபத்தில் மரணம்
1 min read
The owner of the newspaper who returned to the editor died in an accident
14.10.2024
கோவில்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் தின பூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் இறந்தார். அந்த பத்திரிகை ஆசிரியர் இறப்புக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
தினபூமி பத்திரிகை உரிமையாளராக இருந்து வந்தவர் மணிமாறன். இவர் பிரபல லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ்.சேகரின் தம்பி ஆவார். மணிமாறன் மதுரையில் வசித்து வந்தார்.
தினபூமி பத்திரிகை ஆசிரியர் திருநாவுக்கரசு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இன்று காலை இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மணிமாறன் அவருடைய மகன் சதீசுடன் காரில் சென்றார்.
பின்னர் அங்கிருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை சதீஷ் ஓட்டினார்.
கார் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் மோதி, பின்னர் எதிரே வந்த கண்டெய்னரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மணிமாறன் மரணம் அடைந்தார். அவருடன் வந்த அவரது மகன் சதீஷ் படுகாயம் அடைந்தார். அவர் கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.