கராத்தே போட்டி பாவூர்சத்திரம் மாணவிகள் சாதனை-அப்பாவு பாராட்டு
1 min read
Karate competition Bhavoorchatram girls achievement-Father’s praise
15.10.2024
சிவகங்கையில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பாவூர்சத்திரம் எட்டாம் வகுப்பு மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவிகளுக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர், தென்காசி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் உட்பட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர் கீழப்பாவூர் .பால்துரையின் பேத்தி செல்வி.சந்தியா பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் மற்றொரு மாணவி செல்வி.யோக தர்ஷினியும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் சிவகங்கையில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
மேலும் இவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
மாநில அளவிலான கராத்தே போட்டிகள் சாதனை படைத்துள்ள பாவூர்சத்திரம் ஔவையார் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் சந்தியா, யோக தர்ஷினி ஆகியோருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ், தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார், சங்கரன்கோவில் திமுக., சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா,
தென்காசி தெற்கு மாவட்ட திமுக., முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் திரு.சிவபத்மநாதன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஊத்துமலை இளைய ஜமீன்தார் முரளிராஜா, நெல்லை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெகதீஷ், சுரண்டை நகர்மன்ற தலைவர் திரு.வள்ளி முருகன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இரு மாணவிகளுக்கும் ஊக்கத் தொகையினை வழங்கி பாராட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் இரு மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.