June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

1 min read

Tamil Nadu Government Employees Union Working Committee meeting in Tenkasi

17.20.2024
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தென்காசி மாவட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு இன்று தென்காசி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாவட்ட தலைவர் தோழர். பி.கே..மாடசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கடந்த கால சங்க நடவடிக்கைகள் உறுப்பினர் சேர்க்கை வட்ட மாநாடு மாவட்ட மாநாடு நடத்துதல் குறித்து மாவட்ட செயலாளர் தோழர் க.துரைசிங் விரிவாக பேசினார் சங்கரன்கோவில் வட்ட செயலாளர் வே.வெங்கடேஷ
தென்காசி வட்ட செயலாளர் மனோகர், ஆலங்குளம் வட்டக் கிளை தலைவர் வே.புதியவன்.
வி.கே.புதுர் வட்டக் கிளை சார்பில் கணேசன், சிவகிரி வட்டக் கிளை சார்பில் தோழர் குமார், மாவட்ட ஆட்சியரக வட்டக் கிளை தலைவர் செ.செல்வி, செங்கோட்டை வட்டக் கிளை சார்பில் ராதாகிருஷனன், கடையநல்லூர் வட்டக் கிளை சார்பில் த.சேகர்,

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தோழர் பாபு ராஜ், தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் சார்பில் பா.சண்முகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பெலிக்ஸ் மோனிகா தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் லெட்சுமிகாந்தன்
தமிழ்நாடு சமூகநலத்துறை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் ச.அகஸ்தியன் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் க.மார்த்தான்டபூபதி ஆகியோரின் விவாதத்திற்கு பின் கீழ்கன்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி 15 – 11-24க்குள் மாவட்ட இலக்கான 4000 உறுப்பினர் சேர்க்கையை இறுதி செய்து வட்டக் கிளை மாநாடுகளை வட்டக் கிளை பொறுப்பு மாவட்ட நிர்வாகிகள் நடத்தி முடிப்பது என முடிவாற்றப்பட்டது

23-11 – 24 அன்று மாவட்ட மாநாடு நடத்துவது என முடிவாற்றப்பட்டது
(3) 13-12 24 மற்றும் 14 – 12. 24 அன்று தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டின் பேரணியில் தென்காசி மாவட்டத்தின் சார்பில் பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்வது என முடிவாற்றப்பட்டது.

சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டக் கிளைக்கு மாவட்ட பொருளாளர் சு.வேல்ராஜன் மற்றும் மாவட்ட துணை தலைவர் பா.சண்முகம் ஆகியோர் பொறுப்பு நிர்வாகிகளாகவும் சிவகிரி வட்டக் கிளைக்கு மாவட்ட தலைவர் பி.கே.மாடசாமி மற்றும் மாவட்ட துணை தலைவர் க.பாலசுப்பிரமணி, கடையநல்லூர் வட்டக் கிளைக்கு மாவட்ட இணை செயலாளர் த.சேகர் மாவட்ட தலைவர் பி.கே.மாடசாமி மாவட்ட துணை தலைவர் க.பாலசுப்பிரமணியன், ஆலங்குளம் மற்றும் வி.கே.புதூர் வட்டக் கிளைக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட தலைவரும், தென்காசி வட்டக் கிளைக்கு மாவட்ட துணை தலைவர்கள் க.மார்த்தாண்ட பூபதி கோபி, மாவட்ட ஆட்சியரக வட்டக் கிளைக்கு மாவட்ட துணை தலைவர்கள் கோபி, க.மார்த்தாண்ட பூபதி செங்கோட்டை வட்டக் கிளைக்கு மாவட்ட இணை செயலாளர்கள் ராஜ், செ.ராதாகிருஷனை் அவர்களும் பொறுப்பு நிர்வாகிகளாக நியமனம் செய்து முடிவாற்றப்பட்டது நிறைவாக
.மாவட்ட செயலாளர் க.துரைசிங் தொகுப்புரையாற்ற மாவட்ட பொருளாளர் சு.வேல்ராஜன் நன்றியுரை யாற்றினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.