திருமங்கலம் – கொல்லம் நான்கு வழிச்சாலை நிலம் எடுப்பு பணிகள்
1 min read
Tirumangalam – Kollam four lane land acquisition works
27.10.2024
தென்காசி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை- 744 திருமங்கலம் – கொல்லம் 4 வழிச்சாலைப் பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை- 744 திருமங்கலம் கொல்லம் 4 வழிச்சாலைப் பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நில உடைமைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகைக்கு நில உடைமைதாரர்களின் ஆவணங்களை பெறும் பணிக்காக கடையநல்லுார் வட்டத்தில 29.10.2024 அன்று காலை சிந்தாமணி கிராமத்திலும், மாலை தி.நா.புதுக்குடி கிராமத்திலும், 04.11.2024 அன்று காலை மடத்துப்பட்டி கிராமத்திலும், மாலை சொக்கம்பட்டி கிராமத்திலும், 05.11.2024 அன்று காலை கிருஷ்ணாபுரம் மற்றும் வைரவன்குளம் கிராமத்திலும், மாலை கடையநல்லூர் கிராமத்திலும் பின்னர் 06.11.2024 அன்று காலை இடைகால் கிராமத்திலும் மாலை அச்சன்புதுார் கிராமத்திலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
எனவே நில உடைமைதாரர்கள் மூலப்பத்திரம் நகல், கிரையப்பத்திரம் நகல், வில்லங்கச் சான்று (1975 – 2024), இறப்பு சான்று நகல், வாரிசு சான்று நகல், ஆதார் அட்டை நகல், வங்கிப்புத்தகம் நகல், தீர்வை ரசீது,10 (1) அடங்கல், நில உரிமைச் சான்று (வி.ஏ.ஓ.), போட்டோ- 3, பான் கார்டு நகல் இவை அனைத்தும் இரண்டு பிரதிகள் சகிதம் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்குரிய நிவாரணத்திற்காக மனு அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.