ஹூப்ளி – கொல்லம் ரயிலுக்கு தென்காசியி்ல் வரவேற்பு
1 min read
Hubli – Kollam train welcomed in South Asia
28.10.2024
பெங்களூரு சேலம் வழியாக செல்லும் ஹூப்ளி – கொல்லம் ரயிலுக்கு தென்காசியில் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து பெங்களூரு, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, வழியாக ஹூப்ளி – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக தென்காசி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது லோகோ பைலட்டுகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த ரயில் முதல் முறையாக தென்காசி வழியாக இயக்கப்படுவதால் பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது. வண்டி எண் 07313 ஹூப்ளி கொல்லம் சிறப்பு ரயில் 27.10.24 சனிக்கிழமை மாலை 03.15 க்கு ஹூப்ளியில் புறப்பட்டு பெங்களூருக்கு இரவு 11:15க்கு வந்து தென்காசிக்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 11 15 வந்து சேர்ந்தது.
மறு மார்க்கத்தில் வண்டி எண் 07314 கொல்லம் – ஹூப்ளி சிறப்பு ரயில் 27.10.24 ஞாயிற்றுக்கிழமை கொல்லத்தில் இரவு எட்டு முப்பது மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு நள்ளிரவு 11 45 க்கு வந்து பெங்களூருக்கு மறுநாள் காலை 11.15 க்கு சென்று இரவு 8.45க்கு ஹூப்ளியை சென்றடையும்.
தென்காசி வழியாக முதல் முறையாக பெங்களூர் வழியாக கூப்பிலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் தென்காசி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு தென்மேற்கு ரயில்வே சார்பாக தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்து வருவது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் ஏற்பாடு செய்த ரயில் வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் தலைவர் பாண்டியராஜா, செயலாளர ஜெகன், நிர்வாகிகள் தினேஷ், சுரேஷ், குத்தாலிங்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், ரயில் பயணிகள் கலந்து கொண்டனர்.