தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
1 min read
Tamil Nadu Nadar Relationship Methods Federation Executives Consultative Meeting
28.10.2024
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும்போது தீப ஒளி திருநாளில் சிறுவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற பட்டாசுகளை மட்டுமே வாங்கி கொடுங்கள் ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்குங்கள்
பட்டாசு தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் பட்டாசு தொழில்களில் ஈடுபட்டு வந்த ஏழை எளிய மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற நம்முடைய நிர்வாகிகள் மற்றும் அங்கு இருக்கின்ற நாடார் சங்கங்கள் புத்தாடைகள் வழங்கி உதவி செய்யுங்கள் தமிழகம் எங்கும்
தமிழக அரசால் திறக்கப்படும் நூலகங்களுக்கு பெருந்தலைவர் காமராஜருடைய டைய பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் சிலர் நாடெங்கும் நம்மை பற்றி மற்றவர்கள் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவாக பேசுவதை சில அமைப்புகளை சார்ந்தவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள் இத்தகைய செயல்களில் இனிவரும் காலங்களில் யார் செய்தாலும் அவர்களையும் அவர்கள் சார்ந்த இயக்கங்களையும் கண்டித்து இந்தியா முழுவதும் வாழுகின்ற நாடார்கள் இந்தியா முழுவதும் இருக்கின்ற நாடார் சங்கங்கள் தாம் வசிக்கின்ற பகுதிகளில் நம்முடைய சங்கங்களுக்கு முன்பு நம்முடைய உறவின்முறைகளுக்கு முன்பு கண்டன பதாகைகள் வைக்க வேண்டும் என்று பேசினார்கள் இதனை தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் சுப்ரமணியன் மத்திய மாவட்ட தலைவர் கடையநல்லூர் முருகன் குளத்துரான் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.