June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலா தலங்கள்- முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

1 min read

I fled the country due to Dawood’s death threats – Lalit Modi says

26.11.2024
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின் சார்பில் மதுரை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 7 பதிவு மண்டலங்களில் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 39 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2021-2022 மற்றும் 2022-2023-ஆம் ஆண்டுகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, மதுரை மாவட்டம் – கள்ளிக்குடி; திருச்சி மாவட்டம் – முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் உப்பிலியாபுரம்; திருவாரூர் மாவட்டம் – குடவாசல்; நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யம் மற்றும் நாகூர்; கடலூர் மாவட்டம் – மங்கலம்பேட்டை, புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி; செங்கல்பட்டு மாவட்டம் – திருக்கழுக்குன்றம்; காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர்; திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்னொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், சுற்றுலாத் துறை சார்பில் ஒகேனக்கல் அருவிப் பகுதிகள், கொல்லி மலை, ஆண்டிபாளையம் ஏரி, வத்தல்மலை, முட்டம் கடற்கரை, அந்தியூர் ஏரி, மன்னார்குடி – ஹரித்ராநதி கோயில் குளம் ஆகியவை 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலாத் தலங்கள், பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.
சுற்றுலாத் துறையின் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழுமையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் நில சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில் வளைவு, உணவகம், வரவேற்பறை, ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்திடும் வகையில் 2 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, வாகன நிறுத்துமிடம், நடைபாதை, கழிப்பறைகள், சாகச மற்றும் சுற்றுலா வசதிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் 1 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமிராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் 2 கோடியே 84 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் பார்வையாளர்கள் மாடம், குழந்தைகள் விளையாடுமிடம், சென்ட்ரல் பிளாசா, நுழைவுச்சீட்டு வழங்குமிடம், தகவல் பலகை, சிற்பங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு, மின்சாரப் பணிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோயில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள், என மொத்தம் 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை முதல்-அமைச்சர் அவர்கள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.