வயநாடு தொகுதியில் பிரியங்கா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வாகன பேரணி
1 min read
Priyanka holds a vehicle rally in Wayanad constituency to thank voters
1/12/2024
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 28-ந்தேதி எம்.பி.யாக பொறுப்பேற்று கொண்டார். அரசியல் சாசன நகல் ஒன்றை கையில் வைத்தபடி, கேரள கசவு சேலையில் அவர் பதவி பிரமாணம் ஏற்று கொண்டார்.
இதன்பின்பு, முதன்முறையாக வயநாடு தொகுதிக்கு அவர் நேற்று சென்று சேர்ந்துள்ளார். இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் மனந்தவாடி பகுதியில் திறந்த நிலையிலான வாகனம் ஒன்றில் பேரணியாக அவர் சென்றார். அவருடைய இருபுறமும் அவரை வரவேற்கும் வகையில், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். அவர்கள் மூவர்ண பலூன்களை ஏந்தியபடி, எம்.பி. பிரியங்காவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.