June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மயிலப்பபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

1 min read

Free eye check-up camp in Mayilappapuram

10.12.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலப்பபுரத்தில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது- பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு மற்றும் கிறிஸ்தவ வாலிபர் ஐக்கிய சங்கம் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இந்த இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் Ln K.A. ஆனந்த் அவர்கள் தலைமை தாங்கினார்.கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். கண் தான விழிப்புணர்வுக்குழு பொருளாளர் இரா. சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

இலவச கண் பரிசோதனை முகாமினை சேகரத்தலைவர் .ஜீவாதாமஸ் துவக்கி வைத்தார் .மருத்துவர் வினோப்ரிதாவுக்கு ஜார்ஜ் ஆண்ட்ரூஸ் நினைவு பரிசு வழங்கினார்.
செவிலியர்களுக்கு ஞான சிகாமணி செல்லையா நினைவுப்பரிசு வழங்கினார்கள். 130 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 20 பேர் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த இலவச கண் பரிசோதனை முகாமினை அனைத்து ஏற்பாடுகளையும் ஞானதுரை
ஜெயக்கொடி ,ஜெபராஜ்,
அருள் ரெபிசன், அலெக்ஸ், கிங்ஸ்லின் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப் பாளர் எம்.மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.