குற்றாலம் பேரூராட்சியை தென்காசி இணைக்க கூடாது- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
1 min read
Courtallam Town Panchayat should not be merged with Tenkasi – Resolution at Town Panchayat meeting
4.1.2025
குற்றாலம் பேரூராட்சி மன்ற அவசரக்கூட்டம் தலைவர் கணேஷ் தாமோதரன் தலைமையில் நடந்தது.
குற்றாலம் பேரூராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று குற்றாலம் பேரூ ராட்சி மன்ற அவசர கூட் டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை தரம் உயர்த்தியும், கூடுதல் பகு திகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது அதன்படி தென்காசி நகராட்சியில் கூடுதல் பகுதிகளை இணைக்கும் வகையில் குற்றாலம் மற்றும் மேலகரம் பேரூராட்சிகளை தென்காசி நகராட்சியுடன் இணைக்க இருப்பதாக வந்த தகவ லையடுத்து குற்றாலம் பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.
இந்த அவசர கூட்டத்திற்கு குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.கணேஷ் தாமோதரன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் தங்கபாண்டியன். செயல் அலுவலர் சுஷாமா ஆகியோர் முன் னிலை வகித்தனர். குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலர் ராஜகணபதி தீர்மானத்தை வாசித்தார். கவுன்சிலர்கள் கோகிலா, கிருஷ்ணராஜா, மாரியம் கிருஷ்ணம்மாள். ஜெயா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தென்காசி நக ராட்சியுடன் குற்றாலம் பேரூராட்சியை இணைக் இணைக்க கூடாது என்று பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சி
மன்ற தலைவர் எம்.கணேஷ் தாமோதரன் நிருபர்களி டம் கூறியதாவது: குற்றாலம் பேரூராட்சி 8 வார்டுகனை உள்ளடக்கியது. . பேரூராட்சியில் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி உன்னிட்ட பல் வேறு அருவிகள் உள்ளன. 1955ல் கிராம ஊராட்சியாக இருந்தது. அதன்பின் குற்றாலம் 1997ல் இருந்து சிறப்பு நிலை பேரூ ராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 6 கிலோ மீட்டர் தொலைவில் உன்ன தென்காசி நகராட்சியுடன் குற்றாலத்தை இணைக்க தரவுகள் சேகரித்து வருவதாக செய் திகள் வெளியாகி உள்ளது.
அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் குற்றாலம் சுற்றுலாத்தலம் என்ற தனித்தன்மையினை இழக்க நேரிடும். காலப்போக்கில் குற்றாலம் என்றபெயரே மங்கிப்போய் விடும் அளவிற்கு சூழ்நிலை வந்துவிடும். அதுமட்டு ாமல் நிதி பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டால் குற்றாலத்துக்கு என்று பணிகள் மேற்கொள்ளப் படாமல் போய்விடும்.
குற்றாலம் பேரூராட்சியை தென்காசி நகராட்சியும் இணைக்கும் பட்சத்தில் குற்றாலம் ஒரு வார்டாகவே வரையறை செய்யப்படும். எனவே தற்போது உள்ள 8 கவுன்சிலர்கள் மக்கள் பணியாற்றி வரும் நிலையில் கவுன்சிலர்களின் எண்ணிக்கை குறைந்து சரிவர நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். அது மட் டுமல்லாமல் குற்றால சீசன் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சீசன் காலங்களிலும், லட் சக்கணக்கான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் குற்றா லம் வந்து செல்கின்றனர்.
தென்காசி நகராட்சி பகு தியில் சாதாரண நாட்களிலேயே குடிநீர் வினியோகம் சரிவர செய்ய முடியாத நிலை, பொது சுகாதாரப்ப ணிகளை செய்ய இயலாத நிலை உள்ளது. அவ்வாறு இணைப்பு ஏற்பட்டால் சீசன் காலங்களில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போதிய அடிப் படை வசதிகளான குடிநீர் மற்றும் பொது சுகாதாரம் செய்ய முடியாத நிலை ஏற் படும். எனவே குற்றாலம் பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக் கப்படுவதாக உள்ள அரசின் உத்தேச நடவடிக்கையினை முழுமையாக தவிர்த்திடுமாறு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.கணேஷ் தாமோதரன் தெரிவித்தார்.