மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்கள்-கலெக்டர் பரிசு வழங்கினார்
1 min read
The winners of the bicycle competition were awarded by the Collector.
4.1.2025
தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை தென்காசி ஐடி குத்துக்கல்வலசையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் .எஸ். பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ஈ.ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீதூரமும். 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கிமீட்டர் தூரமும், 15 வயதிற்குட்பட்டமாணவர்களுக்கு 20 கீ.மீட்டர் தூரமும் 15 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15கி. மீட்டர் தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கீ.மீட்டர் தூரமும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் தூரமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எ.கே.கமல்கிஷோர், கூறியிருப்பதாவது:-
13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் சந்துரு முதலிடமும், நவபாரதி இரண்டாம் இடமும், மாதேஷ் மூன்றாவது இடமும், அப்துல்ராசிக் நான்காவது இடமும், முகம்மது அஜ்மல் ஐந்தாவது இடமும், நளன் கைலாஷ் ஆறாவது இடமும், விஷ்ணுபிரவின் ஏழாவது இடமும், கிஷோர் எட்டாவது இடமும், நரேன் வெங்கட் ஒன்பதாவது இடமும், வீரமணிகண்டபிரபு பத்தாவது இடமும் பெற்றனர். 13 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மக்ஷிரேனி முதலிடமும், ராஜஸ்ரீ இரண்டாம் இடமும், ஜெயசங்கரி மூன்றாவது இடமும், வேல்ஹர்ஷிதா நான்காவது இடமும், வைஷ்ணவி ஐந்தாவது இடமும், சில்வியஸ்ருதி ஆறாவதுஇடமும், மகாஷினி பிரவின் ஏழாவது இடமும். லேவந்திகா எட்டாவது இடமும், அபிராமி ஒன்பதாவது இடமும், ஹரினி பத்தாவது இடமும் பெற்றனர். 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் நிதாந்தனி முதலிடமும், முகம்மதுசைபுல்லா இரண்டாம் இடமும், சாரதி மூன்றாவது இடமும், மாதவபிரசாத் நான்காவது இடமும், ராகுல் ஐந்தாவது இடமும், ஸ்ரீராம் ஆறாவது இடமும் பாஸ்கர்ஏழாவதுஇடமும், வைகுண்டராஜா எட்டாவது இடமும், மாரிசெல்வம் ஒன்பதாவது இடமும், லெனின் சன்முகவேல்
பத்தாவது இடமும் பெற்றனர். 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மரியசெல்சியா முதலிடமும், சிவமதி இரண்டாம் இடமும், லூர்துவின்சி மூன்றாவது இடமும், துளசி நான்காவது இடமும், அபிநயா ஐந்தாவது இடமும், முகிதா ஆறாவது இடமும், இந்துமதி ஏழாவது இடமும் பூர்னிசா எட்டாவது இடமும் ஷரிபா ஒன்பதாவது இடமும் பவித்ரா பத்தாவது இடமும் பெற்றனர். 17வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ராஜாபாண்டிமுதலிடமும், சிவா இரண்டாம் இடமும், கபிலன் மூன்றாவது இடமும் கோபி நான்காவது இடமும், மகா கண்ணன் ஐந்தாவது இடமும், கௌதம் ஆறாவது இடமும், சுதாராஜன் ஏழாவது இடமும், இசக்கி முத்து எட்டாவது இடமும், ஸ்ரீபராசுராமன் ஒன்பதாவது இடமும், சிவபாலகன் பத்தாவது இடமும் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ராகவி முதலிடமும், மகாலெட்சுமி இரண்டாம் இடமும், ஸ்வாதி மூன்றாவது இடமும், குமரசெல்வி நான்காவது இடமும், ராமலெட்சுமி ஐந்தாவது இடமும், ரஞ்ஜனி ஆறாவது இடமும், புனிதா ஏழாவது இடமும், காவியா எட்டாவது இடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000மும் இரண்டாவது பரிசாக ரூ.3000 மும். மூன்றாம் பரிசாக ரூ. 1000 மும், நான்காம்பரிசு முதல் பத்தாம் பரிசு வரை ரூ.250ம் அவர்களது வங்கிகணக்கில் வரவுவைக்கப்பட உள்ளது.
இவ்வாற மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்தார்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர்நலன் அலுவலர். ராஜேஷ், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.