ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இளங்கோவனின் 2-வது மகனை நிறுத்த தீர்மானம்
1 min read
Decision to field Elangovan’s 2nd daughter in Erode East by-election
9.1.2025
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுடன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேதியில் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும், அந்த தீர்மானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் காலமானதைத் தொடர்ந்து 2023-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் ஒரு ஐஐடி பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முழுக்க முழுக்க சென்னையில் வசித்து வரும் சஞ்சய் சம்பத், சொந்தமாக தொழில்களை கவனித்து வருகிறார்.
பள்ளிப்பருவம் முதலே அறிவுக்கூர்மையாக செயல்படக் கூடிய சஞ்சய் சம்பத், தேர்தல் காலங்களில் தனது தந்தைக்கும், அண்ணன் திருமகன் ஈவெராவுக்கும் உதவிக்கரமாக செயல்பட்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக மட்டும் உள்ள சஞ்சய், தேர்தல் காலங்களில் தனது தந்தைக்கும், அண்ணன் திருமகன் ஈவெராவுக்கும் உதவிக்கரமாக செயல்பட்டிருக்கிறார். இது மட்டுமே அவருக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு ஆகும். மற்றபடி நேரடி அரசியலில் அவர் ஈடுபட்டதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தனது தந்தையின் ஆதரவாளர்களை கூட அதிகம் சந்தித்தது கிடையாது. எல்லாவற்றையும் திருமகன் ஈவெரா மட்டுமே கவனித்து வந்தார்.