குற்றாலம் கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்
1 min read
Plastic seized from Courtallam shops
10.1.2025
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் டி.ஆர்.சுஷாமா தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்தக் கடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் மற்றும் சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் ஆகியோரின் அறிவுரைகளின் படி தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய
குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் டிஆர் சுஷாமா தலைமையில் குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலர் ஆர். இராஜகணபதி முன்னிலையில் இளநிலை உதவியாளர் ராஜகோபால் மற்றும் பணியாளர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை கண்டுபிடித்து அந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அனைத்து நெகிழி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இன்றைய ஆய்வில் 15 கிலோ எடையுள்ள நெகிழி பொருட்களும் ஒன்பது கடைகளுக்கு மேல் அபராதமும் விதிக்கப்பட்டு இன்று ரூபாய் 8500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது எனவே அதனை பொதுமக்களோ வியாபாரிகளோ பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்த நிலையில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது சட்டத்துக்கு விரோதமானது எனவே இது போன்ற செயலில் வியாபாரிகள் ஈடுபடக்கூடாது. இனிமேலும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சட்டப்படி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் டி.ஆர்.சுஷமா மற்றும் பேரூராட்சி சுகாதார அலுவலர் இராஜகணபதி ஆகியோர் அறிவித்துள்ளனர்.