புதுச்சேரி, அசாமில் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று
1 min read
10-month-old baby infected with HMBV in Assam
11.1.2025
சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் HMPV கண்டறியப்பட்டது.
சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல் அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அசாம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:-
எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. அசாமில் பதிவான முதல் எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது, புதிதாக எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும்.
எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. அசாமில் பதிவான முதல் எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது, புதிதாக எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.