January 22, 2025

Seithi Saral

Tamil News Channel

பொள்ளாச்சி விவகாரம்- சபாநாயகர் தீர்ப்புக்க அ.தி.மு.க. எதிர்ப்பு

1 min read

Pollachi issue – AIADMK opposes Speaker’s verdict

11.1.2025
இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் இன்று வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் வழங்கினர்.

இதையடுத்து, இருதரப்பினரும் அளித்த ஆதாரங்களை ஆராய்ந்து பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சபாநாயகர் பேச்சுக்கு சட்டசபையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.