February 14, 2025

Seithi Saral

Tamil News Channel

பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு

1 min read

Heavy rain likely in Tamil Nadu on 18th and 19th

15.1.2025
தமிழகத்தில் முதல்வரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக பசுமை பள்ளிக்கூடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி 2022-2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு சுமாா் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக 2024-2025-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 100 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ. 20 கோடியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.