கடையத்தில் 2 பஸ்கள் மோதி விபத்து – 35 பேர் காயம்
1 min read
2 buses collide in Kadayam – 35 injured
19.1.2025
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 35 பயணிகள் காயமடைந்தனர்.
தென்காசி மாவட் டம் பாவூர்சத்திரத்தில் இருந்து நேற்று நெல்லை மாவட்டம் அகஸ்தியர் பட்டிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஆவுடையானூர் மாடக்கண்ணுபட்டியை சேர்ந்த செல்வமுருகன், அந்த பஸ்சை ஓட்டினார். இதேபோல் அம்பை யில் இருந்து தனியார் பஸ், செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை காசியாபுரம் விஜய் என்பவர் ஓட்டி வந்தார். கடையம் சந்தை அருகே வரும் போது இரு பஸ்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
இதில் அரசு பஸ் டிரைவர் செல்வமுருகன், கண்டக்டர் பிரதீப், தனியார் பஸ் டிரைவர் விஜய், கண்டக் டர் குருசாமி மற்றும் பயணிகள் பொட்டல் புதூர் மாலையம்மாள் (வயது 42), புதுக்குடியிருப்பு காமாட்சி (வயது 55), மணிமுத்தாறு உலகம்மாள் (வயது 72) நெல்கட்டும்பாறை. பால் மாரி (வயது 35), சம்பன்குளம் செய்யதுஅலி பாத் (வயது 45), வீரவநல்லூர் பதுரை ஷான் (வயது 55), அச்சன்புதூர்
மகேஸ்வரி (வயது 24), அம்பை
முருகன் (வயது 72), நான்காம் கட்டளை லட்சுமி (வயது 26), அம்பை அஜிதா (வயது 26), திருமலையப்ப புரம் சங்கரபாண்டியன் (வயது 88) உள்பட 35 பேர் காயம டைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கடையம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ் பெக்டர் ஸ்டீபன் டேவிட் மற்றும் போலீ சார் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில் காயமடைந்தவர்களை உடனடியாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முத லுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி பர்னபாஸ் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடையம் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிககுறுகிய சாலைகளாக இருப்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் சாலைகளை விரிவு படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.