தென்காசி மாவட்ட பள்ளிகளில் குடற்புழு நீக்க நாள் முகாம்
1 min read
3/2/2025
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அங்கன்வாடி மையங்கள், அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் குடற்புழு நீக்க நாள் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவா’ ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் 10.02.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள். சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் 10.02.2025 அன்று வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லாத சிறார்க்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பேருசார் மகளிருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வைத்து வழங்கப்பட உள்ளது.
நமது மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுள்ள 3,08,483 சிறார்களுக்கும். 20 முதல் 30 வயது வரை உள்ள 67.754 மகளிருக்கும் 10.02.2025 திங்கட்கிழமை நடைபெறும் முகாமில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
விடுபட்ட குழந்தைகளுக்கு 17.02.2025 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 1/2 மாத்திரை (200 mg), 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயதுவரை உள்ள மகளிருக்கு 1 மாத்திரை (400 mg) வழங்கப்படும்.
இக்குடற்புழு மாத்திரை உட்கொள்வதினால் குழந்தைகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் இரத்தசோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன். உடற்வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகாம்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ/மாணவியர், பள்ளி செல்லா மாணவ/மாணவியர் மற்றும் மகளிரை அழைத்து வந்து குடற்புழு நீக்க மாத்திரை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவா ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.