June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆம் ஆத்மி தோல்வி குறித்து பேசிய அன்னா ஹசாரே கருத்து

1 min read

Anna Hazare’s comments on Aam Aadmi Party’s defeat

8.2.2025
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் தோல்வி குறித்து பேசிய அன்னா ஹசாரே, “ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். இந்த குணங்கள் தான் வாக்காளர்களை அவர் மீது நம்பிக்கை வைக்க காரணமாக இருக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். நான் இதை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சொன்னேன், ஆனால் அவர் அதை காதில் வாங்கவில்லை, கடைசியாக, அவர் மதுபானத்தில் கவனம் செலுத்தினார். ஏன் இந்தப் பிரச்சினை எழுந்தது? பண பலத்தால் அவர் மூழ்கிவிட்டார்” என்று தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.