June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சீவநல்லூரில் மனுநீதிநாள் முகாம்- கலெக்டர் பங்கேற்பு

1 min read

Petition Day Camp in Seevanallur – Collector participates

14.2.2025
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் இலத்தூர் கிராமம், சிவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைந்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் கிராமம் தோறும் மனுநீதி நாள் முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

மேலும், அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.

இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 13 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறை மூலம் 01 பயனாளிக்கு இயற்கை உரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஈடு பொருள்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் 02 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், சித்த மருத்துவதுறையின் மூலம் 01 பயனாளிக்கு மகப்பேறு சஞ்சீவி மருந்து பெட்டகம் ள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.

முன்னதாக, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, சமூகநலத்துறை. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தார்கள்.

இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர்
உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா,
துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக்அயூப், செங்கோட்டை வட்டாட்சியர் சத்தியவல்லி. இலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி ரமேஷ் . சீவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள். பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.