June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அஞ்சல்துறை மூலம் அடையாள அட்டை- அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

1 min read

Identity cards for everyone through the postal department

15.2.2025
அஞ்சல் துறை மூலம் பொதுமக்களுக்கு அவர்களின் முகவரியை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

பொதுமக்கள் மத்திய மாநில அரசின் பல்வேறு துறையின் நலத்திட்டங்களை பெற முகவரி சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்திய அஞ்சல் துறையானது பொதுமக்களுக்கு அவர்களின் முகவரியை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சலக அடையாள அட்டை என்னும் சேவையை வழங்கி வருகிறது.
இந்த சேவையினை பொதுமக்கள் அருகில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டையானது தேர்தல் கமிஷன், நுகர் பொருள் விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தமிழக போலீசாரால் முகவரி சான்றாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. புதிதாக இடம் பெயர்ந்து பதிய முகவரிக்கு செல்பவர்கள் தங்கள் புதிய முகவரியை பல்வேறு ஆவணங்களில் மாற்ற ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வண்னம் இந்த அஞ்சலக அடையான அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை அருகில் உள்ள அஞ்சலகத்தில் ரூபாய் 20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூபாய் 250 ஆகும். இந்த அட்டை மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 100 செலுத்தி இந்த அட்டையை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் ஆதாரில் முகவரி மாற்றத்திற்கு இந்த அஞ்சலக அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அஞ்சல் துறையில் இந்த சேவை பற்றிய மேலும் விபரங்களுக்கு எங்களது வணிக மேலாளரை 9944108517 (கோவில்பட்டி) மற்றும் 7904420532 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.