அமெரிக்கா: நடுவானில் விமானங்கள் மோதியதில் 2 பேர் பலி
1 min read
US: 2 killed in mid-air plane collision
21.2.2025
அமெரிக்காவில் சமீப காலங்களாக விமான விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மரானா பகுதியில் அமைந்த விமான நிலையத்தில் காலை 8.28 மணிக்கு செஸ்னா 172எஸ் என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. அதே சமயம் லன்கெய்ர் 360 எம்.கே. 2 மற்றொரு விமானம் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
விமானங்கள் இரண்டும் ஒற்றை என்ஜின் கொண்டவை. இவை மோதி கொண்டதில் தீப்பிடித்து எரிந்தன. இந்தச் சம்பவத்தில் 2 விமானங்களில் இருந்த தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையம் மூடப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் மோதிக்கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.
கடந்த இரு வாரங்களில் இதுபோன்ற விபத்துகளை அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை எதிர்கொண்டு வருகிறது. இதுபற்றி துறை ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது.