June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரதமரின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்

1 min read

Shaktikanta Das appointed as Principal Secretary to the Prime Minister

23.2.2025
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவரது நியமனத்தை அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பிரதமரின் 2வது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக்தி காந்ததாஸ், மோடியின் பதவிக்காலம் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நிதி ஆயோக்கின் சி.இ.ஓ.,வாக செயல்பட்டு வந்த பி.வி.ஆர்.சுப்ரமணியத்தின் பதவி காலமும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து, 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.