புளியங்குடி அருகே ஐஏஎஸ் – ஐபிஎஸ் வழிகாட்டி பயிற்சி வகுப்பு
1 min read
IAS – IPS Mentoring Training Course near Puliyangudi
27/2/2025
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பொதிகை நகரில் ஐஏஎஸ் ஐபிஎஸ் காண பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் கலந்துகொண்டு பேசினார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பொதிகை நகரில் பொதிகை போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் சார்பாக ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுக்கான மூன்றாவது வழிகாட்டி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவரையும் பொதிகை அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் காஜாமைதீன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பயிற்சி பற்றிய உரையை பொதிகை போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியர் முனைவர் மாணிக்கம் எடுத்துரைத்தார். அரசு போட்டித் தேர்வு ஆலோசகர் பேராசிரியர் அப்பாத்துரை போட்டி தேர்வு எழுதுபவருக்கு என்னென்ன உதவிகள் அரசு செய்கிறது என்பதை பற்றி விளக்கமாக எடுத்துரைத்து பேசினார்.
ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் குரூப்-1 போட்டி தேர்வுகளை அணுகும் நுணுக்கங்களை பற்றி கூடுதல் காவல் துறை இயக்குனர் பணி நிறைவு பெற்ற செந்தாமரைக் கண்ணன் ஐபிஎஸ் விரிவாக எடுத்துரைத்து பேசினார்.
தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஐபிஎஸ் சீருடை பணியை பற்றி தெளிவாக எடுத்துரைத்து பேசினார் .
ஊக்கமே வெற்றி என்ற தலைப்பில் தமிழ்நாடு கனிம வள கோட்ட மேலாளர் பணி நிறைவு விஜயகுமாரன் வெற்றியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.
அரசு பணியே உனது அடையாளம் என்ற தலைப்பில் எம் மாரியப்பன் எடுத்துப் பேசினார். பயிற்சி நிறைவு சிறப்புரையை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் ஐ பி எஸ் தெள்ளத் தெளிவாக மாணவர்களுக்கு உரையாற்றினார்.
பொதிகை அறக்கட்டளையின் பொருளாளரும் துணை வேளாண்மை அலுவலர் முருகன் நன்றி உரையை ஆற்றினார்.
இந்த பயிற்சி வகுப்பில்
மதுரை வழக்கறிஞர் ராஜசேகரன் தமிழ்நாடு விவேகானந்தர் சேவை அறக்கட்டளையின் நிறுவனரும், வழக்கறிஞருமான நாகராஜன் ,
கலாம் நாகராஜன் ,பொதிகை அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவியர் சுமார் 80 நபர்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு காலை தேநீர் ஏற்பாடுகளும் மதிய உணவு ஏற்பாடுகளையும் பொதிகை போட்டித் தேர்வு பயிற்சி மையம் ஏற்பாடு செய்திருந்தது.