June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

உத்தரகாண்ட் பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு

1 min read

47 workers trapped in Uttarakhand avalanche

28.2.2025
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் இன்று காலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 47 பேர் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மணா அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணா கிராமம் இந்தியா- திபெத் எல்லையில் உள்ளது.

பத்ரிநாத் தாமில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென பனிப்பாறைகள் சரிந்து அவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட நிர்வாகம், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.