June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அருவிகளில் வெள்ளம்

1 min read

Heavy rains cause flooding at waterfalls in Courtallam area

1.3.2025
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. மேலும் பகல் நேரங்களில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குறிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். மலையின் வேகம் குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தபின் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.