இந்தியாவில் உடல் பருமனால் 45 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்-ஆய்வு எச்சரிக்கை
1 min read
In India alone, 450 million people will be affected by obesity
4.3.3036
சமீபத்தில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 45 கோடி பேர் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது தான் இதற்கு முக்கிய காரணம்.
சீனாவில் 627 மில்லியன் (அதாவது 62 கோடி) அதிக எடை அல்லது பருமனான மக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்த எண்ணிக்கை 214 மில்லியனை (21 கோடி) எட்டும் என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.