தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 658 மனுக்கள்
1 min read
658 petitions at Tenkasi District People’s Grievance Redressal Day meeting
19.3.2025
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட 658 கோரிக்கை மனுககளை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 658 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கு நேரடியாக வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஊர்திகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணித்து அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை. கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக்கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படும் ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வர் மருந்தக அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என உரிய அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலெட்சுமி. துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.