திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் பயணிகள் ரெயில் ரத்து
1 min read
Passenger train service between Tirunelveli and Tiruchendur cancelled for 25 days
20.3.2025
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் வழித் தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பின்வரும் ரெயில்கள் 20.03.2025 (இன்று) முதல் 13.04.2025 வரை (25 நாட்கள்) ரத்து செய்யப்படுகின்றன.
*திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில் (மார்ச் 20) இன்று முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும்.
*திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் ரெயில் (மார்ச் 20) இன்று முதல் ஏப்ரல் 13 வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.