செங்கோட்டையில் அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது
1 min read
The roof of a government school in Sengottai collapsed.
21.3.2025
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நேற்று முன்தினம் இரவுபெய்த கனமழையினால் 74 ஆண்டுகள் பழமையான ஆரிய நல்லூர் அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்தது.இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் காயமின்றி தப்பினர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் உள்ள ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 1951 ஆண்டில் துவங்க்கப்பட்ட இந்த பள்ளி 74 ஆண்டுகள் பழமையானது. இந்த பள்ளியில் தற்போது 148 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதே போல செங்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததன் காரணமாக, நள்ளிரவில் இந்த பள்ளி கட்டிடத்தின் தலைமை ஆசிரியர் இருக்கும் பழமையான அறையின் மேற்கூரை மழையில் நனைந்து இன்று இடிந்து விழுந்தது. இதனால் யாருக்கும் எந்த காயம் மற்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
செங்கோட்டையில் அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த பள்ளியில் தான் இஸ்ரோவின் சார்பில் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றிய நிகர் ஷாஜி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பழமையான இந்தப் பள்ளியின் கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.