அடுத்த மாதம் காஷ்மீரில் வந்தே பாரத் ரெயில் சேவை
1 min read
Vande Bharat train service to run in Kashmir next month
27.3.2025
ஜம்மு- காஷ்மீருக்கு முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பிரதமர் மோடி இந்த ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.
கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாரமுல்லா இடையே முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்படலாம் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அம்மாநில முதல்- மந்திரி உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பின்னர் பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரெயில் பாலத்தை பார்வையிட உள்ளார். கத்ராவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.