மகளிர் உரிமை திட்டத்தில் யாருக்கு ரூ-1000 கிடையாது
1 min read
Who doesn’t have Rs. 1000 in the women’s rights scheme?
27.3.2025
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மகளிரின் தேவையறிந்து, அவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. முதிர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்களின் தீவிர பங்கேற்பு மற்றும் அதிகாரமளிப்பு இல்லாமல் முழுமையடையாது. பல ஆண்டுகளாக, உயர்த்தவும், பெண்களின் நிலையை அவர்களை நன்கு படித்தவர்களாகவும், சுயசார்பு உடையவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், பொருளாதார ரீதியாகச் சுதந்திரமானவர்களாகவும் மாற்ற பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி (Global Gender Gap Report-2024) இன் படி, 146 நாடுகளில், இந்தியா 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. பாலின பாகுபாடு பெண்களை மிகுந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆளாக்குகிறது. விவசாயம் மற்றும் வீட்டு வேலை போன்ற குறைந்த கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்குவதற்காக, தமிழ்நாடு முதல-மைச்சர் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” என்ற மகத்தான மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்தார். இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சமூக நீதித் திட்டங்களில் வரலாற்றில் இடம்பிடிக்கும் முயற்சியாகும்.
இந்தத் திட்டம் சுமார் 115 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதத்திற்கு ரூ.1000/-வழங்குகிறது. தங்கள் குடும்பங்களுக்காக வாழ்நாள் முழுவதும் அயராது உழைக்கும் பெண்களின் கடின உழைப்பை அங்கீகரிக்க இத் திட்டம் ஒரு முக்கியமான முயற்சியாகும். இது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், மேலும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும்.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இல்லாதவர் ஆவர்.
- ரூ.25 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.