June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பராக்கிரம பாண்டியன் கட்டிய தென்காசி கோவிலுக்கு 7ந்தேதி கும்பாபிஷேகம்

1 min read

The Tenkasi temple built by Parakrama Pandyan will be consecrated on the 7th.

1.4.2025
தென்காசி மாவட்டம் தென்காசியில் உள்ள அருள்மிகு உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஏப்.7ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

தென்காசியில் பழமையும், பெருமையும் வாய்ந்த கோவிலாக உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 578 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். கடந்த 15.11.1446 அன்று அப்போது தென்காசியை ஆண்டு வந்த பராக்கிரம பாண்டிய மன்னரால் திருக்கோவிலுக்கு கால்கோள் விழா நடைபெற்றது. 10.6.1447 அன்று மூலவரான காசிவிசுவநாதர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திருப்பணிகள் நிறைவு பெற்று ராஜகோபுரம் தவிர மற்ற விமானக் கும்பாபிஷேகம் 1454ம் ஆண்டு நடைபெற்றது. ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கு 3.11.1457ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பராக்கிரம பாண்டிய மன்னர் 1463ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவரது இளைய சகோதரர் குலசேகர பாண்டிய மன்னரால் ஒன்பது நிலைகளை கொண்ட ராஜகோபுர பணி 1472ம் ஆண்டு நிறைவு பெற்றது.
அதன்பின் 1524ம் ஆண்டு சேர மன்னன் உதய மாத்தாண்ட வர்மன் கும்பாபிஷேகம் நடத்தினார். பின்னர் 1848ம் ஆண்டு ராஜகோபுரம் நீங்கலாக மற்ற விமானங்கள், மூலவருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் 21.04.1945 அன்று திருக்கழுக்குன்றம் சந்திரகேரக் குருக்களால் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1967ம் ஆண்டு பி.டி.ராசன் தலைமையில் ராஜகோபுரம் தவிர மற்ற கோவில் விமான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 9.2.1982 அன்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் 9 நிலை ராஜகோபுர கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 9 ஆண்டுகள் நடைபெற்றன. பின்னர் 25.6.1990 அன்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் திருப்புகலூர் வைத்தியநாத சிவாசாரியார் சர்வ சாதகத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின் 16 ஆண்டுகள் கழித்து17.3.2006 அன்று டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் குட முழுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர் 19 ஆண்டுகள் கழித்து வரும் ஏப்.7ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது..

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. அன்று காலை 5 மணிக்கு ராஜ அனுக்ஞை, (பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல்), விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்சகவ்யம், பாத்ர பூஜை, தனபூஜை, விப்ரானுக்ஞை, கிராம தேவ தானுக்ஞை, தேவதானுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமம்;, ஸ்ரீநவக்கிரக ஹோமம், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், திரவ்யாகுதி, காலை 8.30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அங்வ பூஜை, பூர்ணாகுதி. தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடைபெறகிறது. முhலையில் தீpர்த்த ஸங்கிரஹணம், கிராம சாந்தி, ரக்ஷோக்ன ஹோமம், தீபாராதனை. புpரசாதம் வழங்கல் நடைபெறுகிறது.

மறுநாள் 4ந் தேதி காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், ஆச்சார்ய தரவித ஸ்நானம் அக்னிசங்தரஹனம், யாகசாலை ஸ்தண்டிலம் அதை;தல். வுpநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரார்பணம், ஆச்சார்ய ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாத்ராதானம், கடம் யாகசாலை பிரவேசம், முதற்கால யாக சாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம்வழங்கல் நடைபெறகிறது.

ஏப்.5ம்தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விசேச சந்தி, பூதசுத்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, திரப்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் விங்குதல், மாலையில் விக்னேஸ்வர பூஜை, விசேச சந்தி, பூத சுத்தி, பாவனாபிஸேகம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி. பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடைபெறகிறது.
ஏப்.6ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, விசேச சந்தி, பூதசுத்தி, பாவனாபிஷேகம். நான்காம் கால யாகசாலை பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி,, தீபாராதனை, பிரசாதம் வழங்கல், மாலையில் விக்னேஸ்வரபூஜை, விசேச சந்தி, பூதசுத்தி, பாவனாபிஷேகம், ஐந்தாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, வஸ்த்ராகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை. லட்சுமி பூஜை, பிம்பசுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம், பிரசாதம் வழங்கல் நடைபெறகிறது.

ஏப்.7ம் தேதி அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை பூர்ணாகுதி, 6 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிசேனம். நூடி சந்தானம், ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி, 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம்எழுந்தருளல், 9 மணிக்கு மேல் அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை ஸ்ரீகாசிவிசுவநாதசுவாமி திருக்கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூல ஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தீபாராதனை. பிரசாதம் வழங்கல் நடைபெறுகிறது. ஆலாலயசுந்தர வேதசிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாணசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் மணிவாசகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், தென்காசி எம்.பி., ராணி ஸ்ரீகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.அரவிந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் சதன் திருமலைக்குமார், கடையநல்லூர் செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா, ஆலங்குளம் மனோஜ் பாண்டியன்.மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல்ஆணையர் கவிதா, தென்காசி கோட்டாட்சித்தலைவர் லாவண்யா மற்றும்பலர் கலந்து கொள்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.