சங்கரன்கோவில் அருகே வாலிபர் மர்ம மரணம்
1 min read
Mysterious death of a young man near Sankaran Temple
2.4.2.2025
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34) சமையல் தொழிலாளியான இவர் இன்று காலையில் நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிவகுமார் மர்மமான முறையில் மரணமடைந்து கிடப்பதை பார்த்த உறவினர்கள் சின்ன கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவகுமார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சிவகுமாரின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சிவகுமாரின் மரணம் மர்மமான முறையில் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவில் டிஎஸ்பி செங்கோட்டு வேலவன் சிவகுமாரின் உடலை பார்த்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.