July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே பைக்குகள் மோதி 2 பேர் பலி- 2 பேர் படுகாயம்

1 min read

2 killed, 2 seriously injured in bike collision near Tenkasi

6.4.2025
தென்காசி அருகே ஆய்க்குடியில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியில் முன்னால் சென்ற பஸ்ஸை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியதில் பைக்கில் வந்த நான்கு பேர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.

தகவல் அறிந்த ஆய்க்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கி பலியான இரண்டு பேர்களின் உடலையும் விட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விபத்தில் பலியானவர்கள் செங்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சுரேஷ் (வயது 27) ஆய்க்குடி மண்டகப்படி தெருவை சேர்ந்த ராமையா (வயது 60) என்பதும் படுகாயம் அடைந்தவர்கள் செங்கோட்டை தியாகராஜன் என்பவரது மகன் சுதர்சன் (வயது 25) ஆய்க்குடி நடராஜன் என்பவரது மகன் முத்துக்குமார் (வயது 35) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.