பா.ம.க. பிரச்சினை எல்லாம் சரியாகிவிடும்- ராமதாஸ் நம்பிக்கை
1 min read
All the problems of the Workers’ Party will be resolved – Ramadoss is confident
13.4.2025
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆலோசனையின் போது, எல்லாம் சரியாகிவிடும் என நிர்வாகிகளிடம் ராமதாஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னை அக்கரையில் உள்ள இல்லத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.