நீட் விவகாரம்-சட்டசபையில் கடும் விவாதம்
1 min read
NEET issue-Heavy debate in the Assembly
தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் என்ற விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய போக்குவரத்துறை அமைச்சர், நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அளித்தது என்றும், கணபதி ஐயர் பேக்கரி டீலிங் போல. நீட் தேர்வை நீங்க வெச்சிங்கோங்க, நாங்க 11 மருத்துவக்கல்லூரி வெச்சிக்குறோம் என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக, அதை தடுத்தி நிறுத்த முயற்சி செய்தது அதிமுக என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது உங்களின் ஆட்சி தான். கலைஞர் இருக்கும் போது நீட் வரவில்லை. அம்மையார் இருக்கும் போது நீட் தேர்வு வரவில்லை என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது, திமுக ஆட்சியில் இருக்கும் போதும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. அம்மையார் இருக்கும் போது கூட வரவில்லை. யார் இருக்கும் போது கொண்டு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீட் தேர்வு சிக்கலை சரி செய்ய உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நீங்கள் கூறுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது நீங்கள் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வாக்குறுதி கொடுத்தது உண்மை தான், எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் விலக்கு பெற்றிருப்போம் என்றும், 2 மாதங்களுக்கு முன்பு வரை 2031வரை வரை கூட்டணியில் இல்லை என கூறினீர்கள், தற்போது கூட்டணி சேர்ந்து உள்ளீர்கள், யாரை ஏமாற்ற இந்த நாடகம் என்று கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு அந்த விவாதம் அமைந்தது.