அமைச்சர் பொன்முடியை கண்டித்து பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம்
1 min read
Protest in Tenkasi condemning Minister Ponmudi
22.4.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆணைக்கினங்க பெண்களை இழிவாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசும்போது கூறியதாவது;-
ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும்,
பொன்முடி. நீதிமன்ற தீர்ப்புப்படிபதவி விலகியவர் ஆனால் துரதிஷ்டவசமாக அவர் மீண்டும் பதவி ஏற்க நீதிமன்றமே உத்தரவிட்டது. அவர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக இழிவாக பேசுவதில் வல்லவர் முன்பு ஓசி பஸ் என்று பெண்களை கிண்டலடித்தார். திமுக கட்சியை அடியோடு ஒழிக்காவிடில் வருங்கால சமுதாயம் பாதிக்கப்படும். அம்மா ஆட்சியில் மாணவர்களுக்கு லேப்டாப் தந்தார்கள். அதை திமுக ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள். ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு தருவதாக கூறுகிறார்கள். ஆனால் இன்று 60 சதவீத மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் நிலை உள்ளது. ஏனென்றால் பள்ளி கல்லூரிகள் முன்பு கஞ்சா விற்கப்படுகிறது. பொன்முடியை கட்சி பதவியில் இருந்து மட்டும் நீக்கி உள்ளார்கள் மந்திரி பதவியில் இருந்தும் அவரை நீக்கவேண்டும். அதுவரை அதிமுக தொடர்ந்து போராடும் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே.சண்முகசுந்தரம், இணை செயலாளர் முத்துலெட்சுமி,
பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, பாண்டிராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் முருகையா பாண்டியன், வழக்கறிஞர் கார்த்திக்குமார், ஜனதா, சுப்பாராஜ், டாக்டர் கிருஷ்ணசாமி, நெல்லை முகிலன், சிவ சீத்தாராம், தமிழ் என்ற ராமசாமி, தர்மசீலன், ஒன்றிய கழக செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், குணம், பாலகிருஷ்ணன், அருவேல்ராஜ், என் எச் எம் பாண்டியன், முருகேசன், நகர கழக செயலாளர்கள் சுடலை, சங்கர், பேரூர் கழக செயலாளர்கள் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கணேஷ் தாமோதரன், ஜெயராமன், சங்கர், முத்துராஜ், சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் இந்திரா, நிஷா, பாரதமணி உள்ளிட்ட மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் ஜனதா சிறப்பாக செய்திருந்தார்.