June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டெல்லி திரும்பினர்

1 min read

35 Tamils ​​who went on a trip to Kashmir returned to Delhi

23.4.2025
காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பியுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியை இவர்கள் சுற்றி பார்த்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலையடுத்து, பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து டெல்லி திரும்பியவர்கள், தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 35 பேரும் இன்று இரவு சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.