தென்காசி அருகே குட்கா கடத்தல் 2 பேர் கைது
1 min read
2 arrested for smuggling gutka near Tenkasi
26/4/2025
1.25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ,கார் ,ஆட்டோ வையும், பறிமுதல் செய்தனர்.
தென்காசி அருகே உள்ள இலத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட இ.விலக்கு பகுதி குளம் அருகே ஒதுக்குப்புறமாக காரில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை அங்கு வைத்து ஆட்டோவில் மாற்றி தென்காசி செங்கோட்டை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கேரளா கார் நிற்பதாக இலத்தூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு விரைந்து சென்ற இலத்தூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கேரளா பதிவு எண் கார் கொண்ட கார் , ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுவந்தனர். இதில் கார் உரிமையாளர் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டு வீரத்தில், கும்பல் பகுதியைச் சேர்ந்த ஜலாலுதீன் மகன் சித்திக் (வயது 34)
ஆட்டோ ஓட்டுனர் தென்காசி பாறையடி தெரு சேர்ந்த ( வயது சுப்ரமணியன் மகன் மகேந்திரன்(21)
ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் கேரளாவில் இருந்து தென்காசி, பகுதிகளுக்கு குட்கா பான்பராக் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இலத்தூர் போலீசார்இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் கடத்திவரப்பட்ட121 கிலோ குட்கா வின் மொத்த மதிப்பு 1.25லட்சம் ரூபாய் ஆகும். குட்கா கடத்தி வந்த கார் , ஆட்டோ உடன் குட்கா பறிமுதல் செய்த சம்பவம் இலத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது .