தென்காசி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Tenkasi District Farmers Grievance Redressal Day Meeting
26/4/2025
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்றது. தஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது,
தென்காசி மாவட்டத்தில் 2024 2025 ஆம் ஆண்டில் வரை ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் 44466 ஹெக்டேர், சிறுதானியங்கள் 24257 ஹெக்டேர், பயறு வகைகள் 29525 ஹெக்டேர் பருத்தி 1958, கரும்பு 1388 ஹெக்டேர், எண்ணெய் வித்து 1664 ஹெக்டேர், மலைப் பயிர்கள்- 13871 ஹெக்டேர், பழங்கள் 10139 ஹெக்டேர், காய்கறிகள் – 2119 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் – 721 ஹெக்டேர், மருத்துவப் பயிர்கள் – 3 ஹெக்டேர், பூக்கள் – 559 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணி நடைற்று வருகின்றது, இதுநாள் வரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் நிலவுடமை விபரங்களை பதிவு செய்து தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
வேளாண்மைத் துறை சார்பில், கடையம் வட்டார வேளாண்மைத் துறையினர் மூலம் விவசாய தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அத்மா) திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.4000/- மானியத்தில் சூரிய விளக்கு பொறியினையும், 01 பயனாளிக்கு ரூ.4000/-மானியத்தில் மின்கல தெளிப்பானையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், வழங்கினார்.
கடையம் வட்டார வேளாண்மைத் துறையினர், ஆலங்குளம் மற்றும் கடையம் வட்டார தோட்டக்கலைத் துறையினர், வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக்கல்லூரி கிராம தங்கல் திட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட திரளான விவசாயிகளும் கண்டு பயனடைந்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 160 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், வேளாண்மை இணைஇயக்குநர் வி.சி.மகாதேவன், வேளாண்மை துணைஇயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ச.கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் மு.ஜெஸிமாபானு, துணை இயக்குநர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை சு.வசந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் .மா.சங்கர், தென்காசி வனக்கோட்ட உதவி வனக் காவலர் சி.நெல்லைநாயகம், முதுநிலை மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அரியாஜ் அகமது மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.