June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

1 min read

Agreement signed to buy 26 more Rafale fighter jets from France

28.4.2025
இந்தியா, பிரான்ஸ் இடையே 2016ம் ஆண்டு ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது.

இதனிடையே, பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்த போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் இடையே காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படைக்கு புதிய ஆயுதங்களையும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் 26 ரபேல் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிக்கும்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.