ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மாரத்தான் போட்டி
1 min read
Marathon competition at Ayikudi Amar Seva Sangam
29.4.2025
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர் சேவா சங்கம் தென் பிராந்தியங்களில் மிகப் பிரபலமான புகழ் பெற்ற மறுவாழ்வு நிறுவனமாகும். இங்குள்ள அனைத்து மாற்றுத்திறனாளி
களுக்கும் மறுவாழ்வு, கல்வி, தொழில் நுணுக்க அறிவு ஆகியவற்றை கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வழங்கி புகழ் பெற்று வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. சிவசரஸ்வதி வித்யாலயா பள்ளியில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்பிப்பதோடு சமூக அந்தஸ்துடன் சமுதாயத்தில் இணைந்து வாழவும் கற்று கொள்கிறார்கள். அமர் சேவா சங்க மேம்பாட்டாளர், இணைசேர்மன் மற்றும் செயலர் எஸ்.சங்கரராமன், இணை செயலாளர் விஸ்வநாத கணேசன். 51 மாற்றுத்திறனாளி பயனாளிகளுடன் 25 தொழில் நுணுக்க மேம்பாட்டாளர் முனைவர்குழு உறுப்பினர்களும் (Durvah IT Consulting, Bangalore) 11 வது வருடமாக மாரத்தான் ஓட்டத்தில் கலந்து வெற்றியை பதித்துள்ளார்கள்.
40 வருடங்களாக பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற மாராத்தான்கள் ஓட்ட சாம்பியன் பட்டம் வென்ற நமது சங்க மேம்பாட்டாளர், இணை சேர்மன் மற்றும் செயலர் திரு.S.சங்கரராமன். 30 வருடங்களாக அமர் சேவா சங்கத்தின் வளர்ச்சிக்கு இணைந்து செயல்படும் திருமதி.மீனா சுப்பையா (Director Handi-care International, Toronto Canada) இந்த வருடம் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். மாற்றுத்திறனாளி பயனாளிகளை மற்றவர்களோடு இணைந்து வாழ்ந்து அதிகார பகிர்மானம் பெற்று இத்திட்டத்தினை ஈட்டி சம அந்தஸ்துடன் உயர்வாக வாழ வழி வகுத்துள்ளது.
One attachment
• Scanned by Gmail