தென்காசி அருகே நகை கடைகாரரிடம் ரூ.20.77 லட்சம் மோசடி- 4 பேர் கைது
1 min read
4 arrested for cheating a jewellery shop owner of Rs. 20.77 lakh near Tenkasi
1.6.2025
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள வடகரையை சேர்ந்தவர் ஜிந்தாமதார். இவர் இலத்தூர் காவல் நிலையத்தில் தன்னிடம் ஒருவர் தொடர்பு கொண்டு நகை வாங்கித் தருவது போல் நடித்து ரூ.20.77 லட் சத்தை கொள்ளை அடித்து சென்றதாக புகார் கொடுத் துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட இலத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரின் செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதில் அந்த நபர் காரில் கேரளாவுக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை பின் தொடர்ந்து சென்ற தமிழக போலீசார், கேரளா போலீசார் உதவியுடன் பணத்தை கொள்ளை அடித்து சென்றவர்களின் காரை சுற்றி வளைத்து அந்த காரில் இருந்த 4 பேர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர்களை இலத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது, தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தாருகாபுரம் பகுதியை சேர்ந்த ராமர்பாண்டி என்பவரது மகன் கிருஷ்ணன் (வயது 30), செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முகமது ஷரீப் ஷரீப் என்பவரது மகன் நஸ்ரு தீன் (வயது 31), மொய்தீன் பிச்சை மகன் ரியாஸ்கான் (வயது 22), அச்சன்புதூர் இஸ்மாயில்
மகன் மீரான்(வயது 31) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இடைகாலில் நகைக்கடை நடத்தி வரும் ஜிந்தா மதாரிடம், கிருஷ்ணன் தனது நண்பரின் நகை வாசுதேவநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் அட மானத்தில் உள்ளதாகவும், அதை திருப்ப ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், அதை நீங்கள் வாங்கி விற்றால் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள் ளார். இதை நம்பிய ஜிந்தா மதார் ரூ.20.77 லட்சத்துடன் கிருஷ்ணனுடன் காரில் சென்றுள்ளார்.
பின்னர் வாசுதேவநல்லூரில் குறிப்பிட்ட வங்கி முன்பு ஜிந்தா மதாரை நிற்க சொல்லிவிட்டு, பணத்தை வாங்கி கொண்டு, நகையு டன் வருவதாக கிருஷ்ணன் சென்றார். நீண்ட நேரமாக கிருஷ்ணன் வராததால் சிந்தாமணதார் அந்த வங்கிக்கு உள்ளே சென்று பார்த்துள்ளார்
அப்போது பணத்தை வாங்கிச் சென்ற கிருஷ்ணன் வங்கியில் இல்லை இதனால் அதிர்ச்சி அடைந்த ஜிந்தாமதார் இலத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத் துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணன் பொதிகை அறக்கட்டளையின்
நிறுவனர் என்று கூறிக்கொண்டு சமீபத்தில் தென்காசி மாவட்டம் முழுவதும் வட்டி இல்லா கடன் தருவதாக கூறி போஸ்டர்கள் ஒட்டி ஒரு மாநாடு போல அப்பாவி மக்களை திரட்டி அதில் 2 நபர்களுக்கு மட்டும் ரூ.5000 வீதம் கடன் வழங்கி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும் தனது ஆதரவாளர் களுடன் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு உரிய அனுமதி பெறாமல் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டா டிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ள நிலையில், தற்போது நகை கடைக்காரரை ஏமாற்றி ரூ.20.77 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் கிருஷ்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 19 லட்சம், மற்றும் கார் பறிமுதல் செய் யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நான்கு பேர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது போல் ஆசை வார்த்தை கூறும் நபர்களை நம்ப வேண்டாம் எனவும். இது போன்று பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் உடனடியாக காவல் நிலையததிற்கு தகவல் தெரிவிக்லாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.